கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 10வது வீதி, டாடாபாத், 9, 10 மற்றும் 11வது வீதிகள், 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், அப்பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், சாலையோரக்கடைகள் ஆகிய கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் முகக்கவசம் அணியாமல் கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதால் அதன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து 100 அடி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் முகக்கவசம் அணியாமல் இருந்த 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்வோர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்திய ஆணையாளர் அவர்கள், கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மத்திய மண்டல செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 10வது வீதி, டாடாபாத், 9, 10 மற்றும் 11வது வீதிகள், 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், அப்பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், சாலையோரக்கடைகள் ஆகிய கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் முகக்கவசம் அணியாமல் கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதால் அதன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து 100 அடி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் முகக்கவசம் அணியாமல் இருந்த 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்வோர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்திய ஆணையாளர் அவர்கள், கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மத்திய மண்டல செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.