கோவை: கோவையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில் இதுவரை 25 பேருக்கு ரூ.36 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில் இதுவரை 25 பேருக்கு ரூ.36 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும்படையினர் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்ற 68 பேரிடம் இருந்து ரூ.85 லட்சத்து 3 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுவகைகள் உள்பட 5,917 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 25 பேர் தாங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு ரூ.36 லட்சத்து 19 ஆயிரத்து 860 திருப்பி கொடுக்கப்பட்டது. மீதி பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும்படையினர் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்ற 68 பேரிடம் இருந்து ரூ.85 லட்சத்து 3 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுவகைகள் உள்பட 5,917 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 25 பேர் தாங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு ரூ.36 லட்சத்து 19 ஆயிரத்து 860 திருப்பி கொடுக்கப்பட்டது. மீதி பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.