கோவை: தா.மா.க துணைத் தலைவர் கோவை தங்கம் அக்கட்சியில் இருந்து நேற்று விலகியதால் அவர் ஆதரவாளரும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட தலைவருமான ரவிச்சந்திரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கோவை: தா.மா.க துணைத் தலைவர் கோவை தங்கம் அக்கட்சியில் இருந்து நேற்று விலகியதால் அவர் ஆதரவாளரும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட தலைவருமான ரவிச்சந்திரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் தனித் தொகுதியாக திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கப்பட்ட அத்தொகுதியில் கோவை தங்கம் போட்டியிட தாமா.க தலைவர் வாசன் வலியுறுத்தினார்.
ஆனால், கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் போட்டியிட விரும்பினார். வால்பாறை மாவட்ட தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில் கோவை தங்கம் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், வால்பாறை தொகுதி அதிமுக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. திரு.வி.க நகர் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் பெண் கவுன்சிலர் கல்யாணியை வாசன் அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவை தங்கம் தா.மா.கவில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அவருடைய ஆதரவு மாவட்ட தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் கோவை தங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து வாசன் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ரவிச்சந்திரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மாவட்டத்திற்கு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம் பொறுப்பாளராக செயல்படுவார் என கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் தனித் தொகுதியாக திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கப்பட்ட அத்தொகுதியில் கோவை தங்கம் போட்டியிட தாமா.க தலைவர் வாசன் வலியுறுத்தினார்.
ஆனால், கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் போட்டியிட விரும்பினார். வால்பாறை மாவட்ட தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில் கோவை தங்கம் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், வால்பாறை தொகுதி அதிமுக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. திரு.வி.க நகர் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் பெண் கவுன்சிலர் கல்யாணியை வாசன் அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவை தங்கம் தா.மா.கவில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அவருடைய ஆதரவு மாவட்ட தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் கோவை தங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து வாசன் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ரவிச்சந்திரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மாவட்டத்திற்கு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம் பொறுப்பாளராக செயல்படுவார் என கூறியுள்ளார்.