கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரன் இன்று ஈச்சனாரி பகுதியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரன் இன்று ஈச்சனாரி பகுதியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சார வாகனத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீதி வீதியாகச் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் கிணத்துக்கடவு தொகுதிக்கு தேவையான மக்கள் முன்னேற்றத்திற்கான பணிகளை சிறப்பாக செய்வேன் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.
இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சார வாகனத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீதி வீதியாகச் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் கிணத்துக்கடவு தொகுதிக்கு தேவையான மக்கள் முன்னேற்றத்திற்கான பணிகளை சிறப்பாக செய்வேன் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.
இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.