கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் 8 பேருக்கும் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் 8 பேருக்கும் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28) ஆகியோர் 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மேலும் 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம் (34), ஹாரன் பால் (29), பாபு (27) டிசம்பர் 6 -ல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 5 பேரும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 8 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 31 வரை நீட்டித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28) ஆகியோர் 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மேலும் 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம் (34), ஹாரன் பால் (29), பாபு (27) டிசம்பர் 6 -ல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 5 பேரும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 8 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 31 வரை நீட்டித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.