கிணத்துக்கடவு தொகுதிக்கு எந்தப் பணிகளும் அதிமுக செய்யவில்லை - திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் குற்றச்சாட்டு
கோவை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கிணத்துக்கடவு தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மதுக்கரையில் இன்று மாலை நடைபெற்றது.
கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இன்று நடைபெற்ற, வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டத்தில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு பேசியபோது,
இரண்டு முறை குறிச்சி நகராட்சி தலைவராக இருந்தபோது மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து உள்ளேன். தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர மக்கள் எழுச்சியாக உள்ளனர் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கிணத்துக்கடவு தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன், என்றும் உறுதியளித்து பேசினார்.

மேலும், பேசிய அவர் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிணத்துக்கடவு தொகுதி எந்த பணிகளும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார் அதனால், அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் மாய பேச்சை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அதிக வாக்கு வித்தியாசத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அறிமுக கூட்டத்தில் தொண்டர்களிடையே குறிச்சி பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.
கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இன்று நடைபெற்ற, வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டத்தில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு பேசியபோது,
இரண்டு முறை குறிச்சி நகராட்சி தலைவராக இருந்தபோது மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து உள்ளேன். தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர மக்கள் எழுச்சியாக உள்ளனர் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கிணத்துக்கடவு தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன், என்றும் உறுதியளித்து பேசினார்.
மேலும், பேசிய அவர் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிணத்துக்கடவு தொகுதி எந்த பணிகளும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார் அதனால், அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் மாய பேச்சை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அதிக வாக்கு வித்தியாசத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அறிமுக கூட்டத்தில் தொண்டர்களிடையே குறிச்சி பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.