வால்பாறை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், காவல் துறையினர், வீடியோ ஒளிபதிவாளர், தேர்தல் அலுவலர்கள் என்று தனித்தனியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பணி அமர்த்தி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
வால்பாறை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், காவல் துறையினர், வீடியோ ஒளிபதிவாளர், தேர்தல் அலுவலர்கள் என்று தனித்தனியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பணி அமர்த்தி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை - வால்பாறை ஆகிய இரண்டு இடங்களில் 5 பேர்கள் கொண்ட குழு 3 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வால்பாறை சோலையார் அணை பகுதியில் ஆழியாறு ஆனைமலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, கேரளா மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பரிசோதனைக்கு
உட்படுத்தப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம், மற்றும் இலவசம் பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.