திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் உள்ளார். இவரது நிறுவனத்திற்கு இன்று நான்கு வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் 8 மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல திமுக, மதிமுக கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.