கோவை: வால்பாறை தொகுதி தனக்கு கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் எனவும் எஸ்.பி.வேலுமணி ஊழல் துறை அமைச்சர் என்றும் கோவை தங்கம் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை: வால்பாறை தொகுதி தனக்கு கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் எனவும் எஸ்.பி.வேலுமணி ஊழல் துறை அமைச்சர் என்றும் கோவை தங்கம் விமர்சனம் செய்துள்ளார்.
வால்பாறை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படாத நிலையில், அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம் கோவை மத்திய ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டல் ஆர்ஹெச்ஆர்- ல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா, வால்பாறை சட்டமன்ற தொகுதியை பெறவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமுல் கந்தசாமி போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தங்கம், தனக்கு வால்பாறை தொகுதி கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும், அதுமட்டுமல்லாமல் எஸ்.பி. வேலுமணியை ஊழல் துறை அமைச்சர் என்றும் விமர்சித்தார்.
இதனிடையே, சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு? வால்பாறை மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார்.
முக்கியமாக, தமிழ் மாநில காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கோவை தங்கம் உறுதிபட அறிவித்தார்.
வால்பாறை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படாத நிலையில், அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம் கோவை மத்திய ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டல் ஆர்ஹெச்ஆர்- ல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா, வால்பாறை சட்டமன்ற தொகுதியை பெறவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமுல் கந்தசாமி போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தங்கம், தனக்கு வால்பாறை தொகுதி கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும், அதுமட்டுமல்லாமல் எஸ்.பி. வேலுமணியை ஊழல் துறை அமைச்சர் என்றும் விமர்சித்தார்.
இதனிடையே, சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு? வால்பாறை மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார்.
முக்கியமாக, தமிழ் மாநில காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கோவை தங்கம் உறுதிபட அறிவித்தார்.