ரூ.4 கோடி மோசடி செய்த ஈமு கோழி நிறுவனர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கோவை; ஈரோட்டில் ஈமூ கோழி திட்டத்தில் ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட, செந்தில் நாதன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


கோவை; ஈரோட்டில் ஈமூ கோழி திட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்ட செந்தில் நாதன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மேட்டுப்புதுாரை சேர்ந்த செந்தில் நாதன்,(52,) தான் நடத்தி வந்த அம்மன் ஈமு கோழி நிதி நிறுவனம் வாயிலாக அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து 129 பேரிடம் ரூ.4.34 கோடி பெற்று, பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செந்தில்நாதனை, 2016-ல் கைது செய்து சிறையிலடைத்தனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், விசாரணையின் போது, கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதனால், 2016ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால், கோவை டான்பிட் கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட செந்தில் நாதனை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நேற்று உத்தரவிட்டது. செந்தில் நாதன் குறித்த தகவல் தெரிந்தவர்கள், ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு 0424 2256700, 94981 78566 ஆகிய தொலைபேசி எண்களுக்கு, தகவல் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...