கோவை; மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கோவை; மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது;
பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் லைசென்ஸ் இன்றி வாகனங்களை இயக்குவது விதிமீறலாகும். ஆர்வக்கோளாறில் பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்குவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி தொடங்கும் முன்பு, அதிவேகமாக வாகனங்களில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்கள், பெற்றோர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டை மீறி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் கொண்டுவந்தால் அதை பள்ளி நிர்வாகமும் மற்றும் தலைமை ஆசிரியர்களும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கல்விதுறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது;
பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் லைசென்ஸ் இன்றி வாகனங்களை இயக்குவது விதிமீறலாகும். ஆர்வக்கோளாறில் பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்குவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி தொடங்கும் முன்பு, அதிவேகமாக வாகனங்களில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்கள், பெற்றோர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டை மீறி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் கொண்டுவந்தால் அதை பள்ளி நிர்வாகமும் மற்றும் தலைமை ஆசிரியர்களும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கல்விதுறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.