கோவை; கோவை விமானநிலையத்துக்குள் சுவர் ஏறிக் குதித்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை; கோவை விமானநிலையத்துக்குள் சுவர் ஏறிக் குதித்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை விமான நிலையம் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும். விமான நிலையத்துக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒருவர் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்திருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்புக்குநின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் அவரை வளைத்துப் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த முகமது சதாம் (29) என்பது தெரியவந்தது. சித்ரா பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வரும் அவர் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். 15 நாட்களுக்கு முன்னர்தான் கோவை வந்தார். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிக்க நேற்று இரவு விமான நிலையம் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற அவர் தண்ணீர் தேடி விமான நிலைய வளாகத்துக்குள் குறித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை விமான நிலையம் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும். விமான நிலையத்துக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒருவர் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்திருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்புக்குநின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் அவரை வளைத்துப் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த முகமது சதாம் (29) என்பது தெரியவந்தது. சித்ரா பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வரும் அவர் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். 15 நாட்களுக்கு முன்னர்தான் கோவை வந்தார். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிக்க நேற்று இரவு விமான நிலையம் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற அவர் தண்ணீர் தேடி விமான நிலைய வளாகத்துக்குள் குறித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.