பயணி தவறவிட்ட தங்க சங்கிலி: திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டு

கோவை: கோவையில் பயணி தவற விட்ட தங்க சங்கலியை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


கோவை: கோவையில் பயணி தவற விட்ட தங்க சங்கலியை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்தருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆட்டோ ஓட்டுநராக இருந்து கொண்டு, மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையிலும் பணிபுரிந்து வருகிறார்.

இன்றுஅதிகாலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்லும் இடங்களில் இறக்கி விட்டார். அனைத்துப் பயணிகளையும் இறக்கிவிட்டபின்னர் ஓய்வெடுக்க ஆட்டோவில் உட்கார்ந்தபோது இரண்டரை பவுன் தங்கச்சங்கிலி (கிறிஸ்தவ மத அடையாளத்துடன்) இருந்ததைப் பார்த்தார். தன்னுடைய ஆட்டோவில் பயணித்தவர்களில் ஒருவர் தவற விட்டிருக்கலாம் என்று அறிந்தார். பின்னர் அந்த தங்க சங்கிலியை காவல்துறையில் ஒப்படைத்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ் ஆட்டோவில் பயணித்த செட்டிவீதியைச் சேர்ந்த ராணி பிரிசில்லா என்பவர்தான் தங்க சங்கலியை தவற விட்டது என தெரியவந்தது. உரிய விசாரணைக்குப் பிறகு தங்க சங்கிலியை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, ராணி பிரிசில்லாவிடம் ஒப்படைத்தார். மேற்படி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ரமேஷின்நற்செயலைப்பாராட்டி அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கினார்.பல்வேறு தரப்பினரும் ரமேஷை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...