கோவை: கோவை அருகே மென்பொறியாளர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அருகே மென்பொறியாளர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (34). இவர் அங்குள்ள ஐ.டி கம்பெனியில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு மனோஜ் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 26 பவுன் தங்க நகைகள், வைரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (34). இவர் அங்குள்ள ஐ.டி கம்பெனியில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு மனோஜ் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 26 பவுன் தங்க நகைகள், வைரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.