கோவை: கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆதரவு திரட்டினார்.
கோவை: கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆதரவு திரட்டினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கிராமம் கிராமமாகச் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மதுக்கரை மத்திய ஒன்றியம் பகுதியிலுள்ள ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில்ஸ், மயிலேரிபாளையம், சீரபாளையம், போடிபாளையம், மாச்ச நாயக்கன்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்த திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின் போது, மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் E.B. ராஜேந்திரன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அட்சய நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.