கோவை; சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனங்களை முழுமையாகச் சோதனையிடப் பறக்கும்படையினருக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை; சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனங்களை முழுமையாகச் சோதனையிடப் பறக்கும்படையினருக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள்தரப்படுவதைத் தடுக்க பறக்கும்படையினர் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட லட்சகணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நகைகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் வாகனங்களை முழுமையாக சோதனை இடுவதற்கான அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்று முதல் வாகனங்களில் முழு அளவில் சோதனை நடத்த, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட், கதவு உள்ளிட்ட பகுதிகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறதா என போலீசார் சோதனையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றனர். போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பறக்கும் படைகளில் உள்ளதால், அவர்களும் வாகனங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வரும் நாட்களில் மேலும் லட்சகணக்கான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்படலாம் என்று தெரிகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள்தரப்படுவதைத் தடுக்க பறக்கும்படையினர் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட லட்சகணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நகைகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் வாகனங்களை முழுமையாக சோதனை இடுவதற்கான அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்று முதல் வாகனங்களில் முழு அளவில் சோதனை நடத்த, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட், கதவு உள்ளிட்ட பகுதிகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறதா என போலீசார் சோதனையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றனர். போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பறக்கும் படைகளில் உள்ளதால், அவர்களும் வாகனங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வரும் நாட்களில் மேலும் லட்சகணக்கான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்படலாம் என்று தெரிகிறது.