அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ஏவல் துறையாக மாறியுள்ளதா கோவை காவல்துறை? பிரச்சாரத்தின் போது இடையூறு - திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காட்டம்!

கோவை: அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கைக்கூலியாக கோவை மாநகர காவல்துறை மாறியுள்ளதாக, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இன்று ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக குற்றம் சாட்டியுள்ளார்.



கோவை: அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கைக்கூலியாக கோவை மாநகர காவல்துறை மாறியுள்ளதாக, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இன்று ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் அறிவித்துள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அதேபோல, அதிமுக சார்பில் எஸ் பி வேலுமணி போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், இன்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோவை குனியமுத்தூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் என்ற பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



இதையடுத்து, காவல் துறையினரை கேள்வி கேட்ட கார்த்திகேய சிவசேனாபதி, காவல்துறையினர் வேண்டுமென்றே பிரசாரத்துக்கு மிகுந்த இடையூறாக உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, அவர் காவல் துறையிடம், "காவல்துறை எஸ் பி வேலுமணியின் ஏவல் துறை" என்று சாடினார்.

தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும், காவல்துறையினர் பிரச்சாரத்தின் போது, தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் குனியமுத்தூர் முக்கிய சாலையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...