கிணத்துக்கடவு திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று இரவு கிணத்துக்கடவு நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கிணத்துக்கடவு நகர திமுக பொறுப்பாளர் கனகராஜ், கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகரம் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது திமுக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிப்பது போன்ற முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கதிரேசன், கணேஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.