கோவை; கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து, நோயில் இருந்து பாதுகாக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து, நோயில் இருந்து பாதுகாக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸகட் சாலை, 8, 9 மற்றும் 10வது வீதிகள், 100 அடி சாலை, டாடாபாத் ஆகிய பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், சிற்றுண்டிகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கொரோனா தொற்று முன்னெச்செரிக்கைகளை பின்பற்றுகின்றனரா என்றும் ஆய்வு செய்தார். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைக்கழுவியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா நோய் தொற்றை முற்றிலும் தடுக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

முகக்கவசம் அணியாமல் இருந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் நான்கு பேர் மற்றும் நடத்துநர்களிடம் இருந்து தலா ரூ.500ம், பொதுமக்கள் 15பேரிடம் இருந்து தலா ரூ.100ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காந்திபுரத்தில் சிடிஎம்.ஹோம் நகாபுற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்தையும் அவர் பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸகட் சாலை, 8, 9 மற்றும் 10வது வீதிகள், 100 அடி சாலை, டாடாபாத் ஆகிய பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், சிற்றுண்டிகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கொரோனா தொற்று முன்னெச்செரிக்கைகளை பின்பற்றுகின்றனரா என்றும் ஆய்வு செய்தார். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைக்கழுவியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா நோய் தொற்றை முற்றிலும் தடுக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
முகக்கவசம் அணியாமல் இருந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் நான்கு பேர் மற்றும் நடத்துநர்களிடம் இருந்து தலா ரூ.500ம், பொதுமக்கள் 15பேரிடம் இருந்து தலா ரூ.100ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காந்திபுரத்தில் சிடிஎம்.ஹோம் நகாபுற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்தையும் அவர் பார்வையிட்டார்.