திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள்; சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி; சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பரப்புவதாக திமுகவினர் மீது போலீசார் பொய்யான வழக்குகள் பதிவு செய்வதாக கூறி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்துள்ளனர்.


பொள்ளாச்சி; சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பரப்புவதாக திமுகவினர் மீது போலீசார் பொய்யான வழக்குகள் பதிவு செய்வதாக கூறி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகக்கூறி பொள்ளாச்சியில் திமுகவினர் 4 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், தொடர்ந்து திமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்தி வருவதாகக்கூறி கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், "தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் தூண்டுதலின் பேரில் செயல்பட்டுவரும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...