உதகை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

உதகை: உதகை உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் விவரம் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.


உதகை: உதகை உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் விவரம் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளன. அதில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடபட்டது. ஆனால் உதகை, தளி, விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி அவசர அவசராமாக சிக்மங்களூருவிலிருந்து உதகைக்கு இன்று மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.



இதனை தொடர்ந்து சி.டி.ரவி, உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், உதகை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்த 20-க்கும் மேற்பட்டோர்களிடம்நேர்காணல் நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி கூறியதாவது;

“உதகை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் நாளை வெளியிடபடும். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுகவுக்கு குழப்பம் இருக்கிறது. அதனை பாஜக தெளிவுபடுத்தும். சிஏஏ சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை” இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...