அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு

கிணத்துக்கடவு; தேசிய குடற்புழு நீக்க வாரத்தை ஒட்டி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கிணத்துக்கடவு; தேசிய குடற்புழு நீக்க வாரத்தை ஒட்டி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை போக்குவதற்கு மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய குடற்புழு நீக்கம் வாரம் இரண்டு கட்டமாக இன்று முதல் 29ம் தேதி வரை கடைபிடிக்கபடுகிறது.



இதையடுத்து கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சமித்தா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு குடற்புழு பாதிப்பை தடுப்பதற்கான அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன. குடற்புழு நீக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவ- மாணவர்களிடையே சுகாதார துறையினர் எடுத்துரைத்தனர்.



குடற்புழு நீக்கத்தினால் ரத்தசோகை தடுக்கப்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் வாயிலாக, அறிவுத்திறனும் மற்றும் உடல் வளர்ச்சியும் மேம்படும் என மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முதல் கட்டமாக இன்றுமுதல் 20ம் தேதி வரையும், இரண்டாவது கட்டமாக 22ம் தேதி முதல் 27ம் தேதி வரையும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு மார்ச் 29ம் தேதி சிறப்பு முகாம் வாயிலாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...