கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட எஸ் பி வேலுமணி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, தொண்டாமுத்தூர் தொகுதியில் இதுவரை யாரும் பெற முடியாத அளவிற்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என எஸ். பி. வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.