மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்!

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.



இந்நிலையில், மக்கள் நீதி மையம் துணை தலைவரும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான மகேந்திரன் தேர்தல் அலுவலரிடம் சி ராம்குமார் இடம் வேட்புமனு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் சிங்காநல்லூர் தொகுதி மக்களிடம் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், தமிழக மக்கள் மாற்றத்துக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு, கோவை மக்கள் முன்னோடியாக இருப்பார்கள் என்றார்.

தேர்தலுக்கு முன்னதாகவே, அறிக்கைகள் மற்றும் போலி வாக்குறுதிகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க ஆளும் கட்சி முயற்சிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர், மக்கள் மிகுந்த அன்பு செலுத்தியமைக்கு நன்றி தெரிவித்த அவர், சிங்காநல்லூர் தொகுதியில் தனது வெற்றிக்காக பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.

மேலும், கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட மநீம வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் மேற்கு மண்டலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, மேற்கு மண்டலத்தை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம் என்று கூறினார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விரைவில் கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார், மேலும், தனது பிரச்சாரத்தை ராஜா வீதியில் உள்ள தெர்மூட்டியிலிருந்து தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...