பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய 2 திமுகவினரிடம் விசாரணை

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய 2 திமுகவினரிடம் விசாரணை


கோவை: பொள்ளாச்சி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு செய்தி பரப்பியதாக திமுகவைச் சேர்ந்த இருவரை கைது செய்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும் தற்போது பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பி தவறான கருத்துகளை, திமுகவைச் சேர்ந்த பட்டீஸ்வரன் மற்றும் தாஸ் பிரபு என இருவரும் பதிவு செய்து வருவதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்தகோவை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளராக பதவி வகித்து வரும் மரப்பேட்டை வீதியை சேர்ந்த பட்டீஸ்வரன் மற்றும் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்ததிமுக பிரமுகர் தாஸ்பிரபு உள்ளிட்ட இருவரையும் கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

பின்னர், அவர்கள் மீது துணை சபாநாயகர் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி தேர்தல் நேரத்தில் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...