கோவை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பித்து ஓட்டம்; உடுமலை அருகே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

கோவை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பித்து ஓட்டம்; உடுமலை அருகே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.


கோவை: கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்றம் புரிந்தசிறுவர்களுக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது.இதில், நேற்று மாலை 6 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், நள்ளிரவு உடுமலை அருகே 6 சிறுவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கோவைக்கு கொண்டு வந்தனர்.

தப்பியோடிய சிறுவர்கள்

கோவை, அவினாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் இந்த இல்லத்தில் வைக்கபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு சாப்பிடுவதற்காக 11 சிறுவர்களை அறையிலிருந்து திறந்து விட்டனர், அப்போது, ஆறு சிறுவர்கள் வார்டனை தாக்கி விட்டு அறையில் வைத்து பூட்டினர். 

மற்ற ஐந்து சிறுவர்களை, மற்றொரு அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பினர். அவர்கள் கூச்சலிட்டும் வெளியே கேட்கவில்லை.பின், இரவு 11 மணிக்கு, வார்டன் அறை கதவை உடைத்து வெளியே வந்து போலீசுக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக தனிப்படை அமைத்து தப்பிய சிறுவர்களை தேடி வந்தனர். 

ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையங்களில் தீவிரமாக தேடி தேடி வந்த நிலையில், உடுமலை அருகே ஆறு சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கோவை அழைத்து வரப்பட்டன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...