பொள்ளாச்சி; 3 லட்ச ரூபாய் பைக்குக்கு ஆசைப்பட்டு உயிர் நண்பரை கால்வாயில் தள்ளி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி; 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்குக்கு ஆசைப்பட்டு உயிர் நண்பரை கால்வாயில் தள்ளி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்த புருஷோத்தமன். பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாயார் சரோஜினி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் புருஷோத்தமனை போலீசார் தேடி வந்தனர்.

புருஷோத்தமனின் நெருங்கிய நண்பரான சேத்துமடையை சேர்ந்த உதயகுமாரிடம் இருந்து புருஷோத்தமனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விலை உயர்ந்த பைக்குக்கு ஆசை பட்டு நண்பரை காண்டூர் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உதயகுமார் மீது பைக் திருட்டு, கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை அவிநாசி சிறையில் அடைத்தனர்.
புருஷோத்தமனின் உடலை கடந்த 3 தினங்களாக திருமூர்த்தி அணை, கால்வாய் பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை உடல் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்த புருஷோத்தமன். பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாயார் சரோஜினி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் புருஷோத்தமனை போலீசார் தேடி வந்தனர்.
புருஷோத்தமனின் நெருங்கிய நண்பரான சேத்துமடையை சேர்ந்த உதயகுமாரிடம் இருந்து புருஷோத்தமனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விலை உயர்ந்த பைக்குக்கு ஆசை பட்டு நண்பரை காண்டூர் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உதயகுமார் மீது பைக் திருட்டு, கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை அவிநாசி சிறையில் அடைத்தனர்.
புருஷோத்தமனின் உடலை கடந்த 3 தினங்களாக திருமூர்த்தி அணை, கால்வாய் பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை உடல் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.