கோவை மாவட்டத்தில் முதல் நாளான இன்று இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்..!

கோவை: கோவை மாவட்டத்தில் முதல் நாளான இன்று 2 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் பெறப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் முதல் நாளான இன்று 2 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் பெறப்பட்டது.

வேட்பு மனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் உடன் 2 வாகனங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் உடன் வந்தவர்கள் 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் மற்றும் அவருடன் 2 பேர், என மொத்தம் 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் வேட்பாளருக்கு உதவி செய்யும் வகையில் அலுவலகங்களில் உதவி மையம் துவங்கப்பட்டு 2 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். உடல் வெப்பநிலைய தானியங்கி முறையில் கண்டறியும் நவீன கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்



இந்து மக்கள் கட்சி சார்பில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இக்கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன், சூலூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் அதிகாரி சாந்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மந்திராச்சலம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...