கோத்தகிரியில் அ.தி.மு.க. கோஷ்டி மோதல்: விவசாய அணி பிரமுகர் நெஞ்சில் எம்.எல்.ஏ. குத்தினார் - நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!

நீலகிரி: குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு மற்றும் அ.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் பாரதியாருக்கும் ஏற்பட்ட மோதலின்போது சாந்தி ராமு பாரதியார் நெஞ்சில் குத்து விட்டதால் நெஞ்சு வலித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


நீலகிரி: குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு மற்றும் அ.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் பாரதியாருக்கும் ஏற்பட்ட மோதலின்போது சாந்தி ராமு பாரதியார் நெஞ்சில் குத்து விட்டதால் நெஞ்சு வலித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாந்தி சாமு. இவருக்கும் வெலிங்டன் கண்டோன்ட்மென்ட் வாரிய துணை தலைவர் மற்றும் அ.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளராகவும் உள்ள பாரதியாருக்கும் நீண்ட காலமாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு கண்டோன்மென்ட் வாரிய பகுதிக்குள் நிவாரணப்பணிகளை செய்ய விடாமல் பாரதியார் தடுத்து வந்தார். இதையடுத்து போலீஸ் உதவியுடன் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

கோஷ்டி பூசல் இருந்து வந்த நிலையில் சாந்தி ராமுவுக்கு மீண்டும் குன்னூர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. தலைமை தற்போது சீட் வழங்கவில்லை. மாறாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கோத்தகிரி வந்த குன்னூர் அ.தி.மு.க. வேட்பாளர் வினோத் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மற்றும் பாரதியாரும் உடன் சென்றிருந்தனர்.



சிலைக்கு மாலை அணிவிக்க படிக்கட்டில் ஏறியபோது அங்கு அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது ஒருவரையொருவர் தள்ளி விட்டனர். அப்போது ராமுவின் ஆதரவாளர்கள் பாரதியாரை நோக்கி அடிக்கப் பாய்ந்தனர்.



பாரதியார் சாந்தி ராமுவை தொடர்ந்து தள்ளிக் கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த சாந்திராமு, பாரதியாரின் நெஞ்சு மற்றும் முகத்தில் குத்து விட்டார். இதனால் அங்கு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அங்கிருந்த மூத்த அ.தி.மு.க.வினர் உடனடியாக பாரதியாரை கீழே இறக்கி அவரை அழைத்துச் சென்று காரில் அமர வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரது ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கப்பச்சி வினோத் அனைவரையும் சமாதானம் செய்து ஓட்டு கேட்க அழைத்துச் சென்றார். குன்னூர் வந்த பாரதியார் நெஞ்சுவலி காரணமாக குன்னூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...