திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2.40 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2.40 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - அவினாசி சாலை, எஸ்ஏபி சிக்னல் அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் ரக டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். டெம்போவில் ரூ 2,40 லட்சம் மதிப்பிலான 25,10,5 கிலோ பைகளில் மொத்தம் 445 அரிசி மூட்டைகள் எடுத்து வரப்பட்டதாகவும், அவற்றில் விநியோகம் செய்தது போக 252 அரிசி மூட்டைகள் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. மேலும் சோதனையில் அவற்றிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, பறக்கும் படையினர் 252 அரிசி மூட்டையுடன் டெம்போவை பறிமுதல் செய்து திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தினர்.
விசாரணையில், திருப்பூர் - தாராபுரம் சாலை, பொல்லிக்காளிபாளையம் விஜயகுமார் அரிசி ஆலையிலிருந்து அரிசி மூட்டைகள் விநியோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - அவினாசி சாலை, எஸ்ஏபி சிக்னல் அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் ரக டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். டெம்போவில் ரூ 2,40 லட்சம் மதிப்பிலான 25,10,5 கிலோ பைகளில் மொத்தம் 445 அரிசி மூட்டைகள் எடுத்து வரப்பட்டதாகவும், அவற்றில் விநியோகம் செய்தது போக 252 அரிசி மூட்டைகள் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. மேலும் சோதனையில் அவற்றிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, பறக்கும் படையினர் 252 அரிசி மூட்டையுடன் டெம்போவை பறிமுதல் செய்து திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தினர்.
விசாரணையில், திருப்பூர் - தாராபுரம் சாலை, பொல்லிக்காளிபாளையம் விஜயகுமார் அரிசி ஆலையிலிருந்து அரிசி மூட்டைகள் விநியோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.