அவிநாசி தொகுதி ஆதித்தமிழர் பேரவை வேட்பாளருக்கு ஆதரவாக கொ.ம.தே.க. நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வர்: ஈஸ்வரன் அறிவிப்பு!

கோவை: தி.மு.க. கூட்டணியில் அவிநாசி தொகுதியில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவையின் வேட்பாளருக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.



கோவை: தி.மு.க. கூட்டணியில் அவிநாசி தொகுதியில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவையின் வேட்பாளருக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க. தலைமையிலான கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் எனவும், மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்போம் எனவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகும் எனவும் கூறினார். மேலும், தான் போட்டியிடுவது குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவு எடுக்கும் என்றார்.

`விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?' என்ற கேள்விக்கு பதிலளித்த ஈஸ்வரன், கொங்கு மண்டலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வில்லை எனவும், அதனால் அவர்களுக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் அவிநாசி தனித்தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் போட்டியிடும் அதியமானுக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என தெரிவித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமலஹாசன் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றார். கொங்கு மண்டலம் மற்றும் ஊழல் கோட்டை என்ற கமல்ஹாசன் கருத்துக்குப் பதிலளித்த அவர், கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் ஊழல் கோட்டையாக உள்ளது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...