கோவை: கோவையில் வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் 1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு சட்டமன்ற தேர்தலுக்காக 1, 370 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே உள்ள மையங்களில் கூடுதலான வாக்குச் சாவடிகளும், புதிய மையங்கள் தேர்வு செய்யப்பட்டும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து அன்மையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைதள பகுதியில் தான் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் நிறைவடையும்,’’ என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு சட்டமன்ற தேர்தலுக்காக 1, 370 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே உள்ள மையங்களில் கூடுதலான வாக்குச் சாவடிகளும், புதிய மையங்கள் தேர்வு செய்யப்பட்டும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து அன்மையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைதள பகுதியில் தான் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் நிறைவடையும்,’’ என்று தெரிவித்தார்.