சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் போது, குறுகிய காலகட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை இந்தியா கண்டுபிடித்தது. இது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.
மேலும், 3ம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, வி.சி.க தலைவர் திருமாவளவனும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.