முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம்: கோவை மாநகராட்சி அதிரடி!

கோவை: முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படும் என கூறியிருந்தார்.

இதையொட்டி கோவை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் சிறப்பு பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது.



நேற்று மாநகர் முழுவதும் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடமிருந்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.



தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் கடைகளுக்கு செல்லக் கூடியவர்களும் முகக்கவசம் அணிந்து உள்ளே அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள், கடை நடத்துபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...