கோவை: கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் ரூபாய் 5 கோடி பதுங்கி இருப்பதாக கூறி நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் ரூபாய் 5 கோடி பதுங்கி இருப்பதாக கூறி நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி நகரமைப்பு பொறியாளர் லட்சுமணன் வீட்டில் 5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மாநகராட்சி பொறியாளரின் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு வந்த பறக்கும் படையினர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி பொறியாளர் அரசு வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, வெகுநேரமாகியும் பறக்கும் படையினர் வீட்டுக்குள் சென்று சோதனை இடவில்லை என திமுகவினர் புகார் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது குறித்து பறக்கும் படையினர் கூறுகையில்:- தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்த பின்பு வீட்டுக்குள் சென்று சோதனை நடத்துவோம், என்றனர். இதனால் நள்ளிரவு முதல் விடிய விடிய அந்த பகுதியில் பரப்பாக காணப்பட்டது.