கோவையில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோக்கிகும் பணி இரண்டு நாட்களுக்குள் நிறைவடையும், அதிகாரிகள் தகவல்
கோவை: கோவை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 500 முதியோர்கள், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகிக்கும் பணி இரண்டு நாட்களுக்குள் நிறைவடையும், என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டு, தபால் வாக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோவையில் தபால் வாக்கு அளிப்பதற்கு அவர்களது இருப்பிடத்திற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று, அவர்களுக்கு படிவம் 12-டி வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் கோவை மாவட்டத்தில் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பம் விநியோகப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த பணி நிறைவடையும், என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் பெறலாம்.
அவ்வாறு விண்ணப்பம் பெற்றவர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தபால் வாக்கு செலுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ கவரேஜ் செய்யவும் திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டு, தபால் வாக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோவையில் தபால் வாக்கு அளிப்பதற்கு அவர்களது இருப்பிடத்திற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று, அவர்களுக்கு படிவம் 12-டி வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் கோவை மாவட்டத்தில் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பம் விநியோகப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த பணி நிறைவடையும், என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் பெறலாம்.
அவ்வாறு விண்ணப்பம் பெற்றவர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தபால் வாக்கு செலுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ கவரேஜ் செய்யவும் திட்டமிட்டுள்ளோம், என்றனர்.