கோவை: தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கக் கோரி பல்வேறு இயக்கங்கள் இணைந்து கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கக் கோரி பல்வேறு இயக்கங்கள் இணைந்து கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் கனிமவள கொள்ளையை கண்டித்தும், சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கம், தடாகம் பள்ளத்தாக்கு கனிம வள பாதுகாப்புக் குழு, சமூகநீதி பஞ்சமி நில மீட்பு இயக்கம், கௌசிகா நதி உழவர் குழு மற்றும் கோவை மாவட்ட இளைஞர் சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய இயக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 52 ஆயிரம் யூனிட் செம்மண் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள்மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அரசு துறையினரிடம் எந்த அனுமதியும் பெறாமல், சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்வாரியத்துறை அலுவலர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.
தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் கனிமவள கொள்ளையை கண்டித்தும், சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கம், தடாகம் பள்ளத்தாக்கு கனிம வள பாதுகாப்புக் குழு, சமூகநீதி பஞ்சமி நில மீட்பு இயக்கம், கௌசிகா நதி உழவர் குழு மற்றும் கோவை மாவட்ட இளைஞர் சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய இயக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 52 ஆயிரம் யூனிட் செம்மண் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள்மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அரசு துறையினரிடம் எந்த அனுமதியும் பெறாமல், சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்வாரியத்துறை அலுவலர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.