பொள்ளாச்சி: லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
டீசல் விலை உயர்வு, லாரி உதிரி பாகங்கள் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வை கருத்தில்கொண்டு கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை உயர்த்தி வழங்கக் கோரி பொள்ளாச்சியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி வாடகையை உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
டீசல் விலை உயர்வு, லாரி உதிரி பாகங்கள் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வை கருத்தில்கொண்டு கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை உயர்த்தி வழங்கக் கோரி பொள்ளாச்சியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி வாடகையை உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்