கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இலவச வை-பை வசதி அளிக்கும் ஸ்மார்ட் மரம் இடமாற்றம் செய்யப்பட்டது.
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இலவச வை-பை வசதி அளிக்கும் ஸ்மார்ட் மரம் இடமாற்றம் செய்யப்பட்டது.
கோவை ஸ்மார்ட் சிட்டி ஆக மாற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது ஒருபகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வை-பை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மரம் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டது. இந்த மரத்தின் உச்சியில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு அதிலிருந்து தினமும் 500 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வைஃபை வசதி மற்றும் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க வ.உ.சி மைதானத்துக்குள் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மரம் உபயோகம் இல்லாமல் இருந்தது. எனவே அந்த மரம் தற்போது வ.உ.சி உயிரியல் பூங்கா அருகே குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு எதிரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, `வ.உ.சி உயிரியல் பூங்கா அருகே ஸ்மார்ட் மரத்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைச் சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு 30 பேர் உட்காரும் வகையில் ஐந்து பெஞ்சுகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த மரத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு வை-பை வசதி கிடைக்கும்' என்றனர்.
கோவை ஸ்மார்ட் சிட்டி ஆக மாற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது ஒருபகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வை-பை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மரம் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டது. இந்த மரத்தின் உச்சியில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு அதிலிருந்து தினமும் 500 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வைஃபை வசதி மற்றும் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க வ.உ.சி மைதானத்துக்குள் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மரம் உபயோகம் இல்லாமல் இருந்தது. எனவே அந்த மரம் தற்போது வ.உ.சி உயிரியல் பூங்கா அருகே குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு எதிரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, `வ.உ.சி உயிரியல் பூங்கா அருகே ஸ்மார்ட் மரத்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைச் சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு 30 பேர் உட்காரும் வகையில் ஐந்து பெஞ்சுகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த மரத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு வை-பை வசதி கிடைக்கும்' என்றனர்.