கோவை: கோவையில், ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில், ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி கண்காணிப்புக் குழுவினர் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில்நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிகில் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
இதையடுத்து அவரது காரை சோதனை செய்தபோது காரில் ரூபாய் 3 லட்சத்து 83 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கான ஆவணத்தைக் காட்டும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால், அவரிடம் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. உடனடியாக அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி கண்காணிப்புக் குழுவினர் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில்நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிகில் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
இதையடுத்து அவரது காரை சோதனை செய்தபோது காரில் ரூபாய் 3 லட்சத்து 83 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கான ஆவணத்தைக் காட்டும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால், அவரிடம் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. உடனடியாக அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.