கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் கோவை ராமானுஜர் நகர் அருகில் உள்ள சிலம்பு வணிக வளாகத்தில், இன்று நடைபெற்றது. பேரவைத் தலைவர், மனுநீதிச்சோழன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில, அமைப்பு செயலாளர் சதீஷ் மள்ளர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கொங்கு வம்ச பட்டக்காரர் வி.யூ. கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
முன்னதாக, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பிக்க வழிவகை செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களாக, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பொது மேடைகளில் பேசி கௌரவித்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், வரும் சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை அறிவிப்பிற்கு அடித்தளம் அமைத்து நிறைவேற்றிய அதிமுக அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள 21 சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மாவட்டம் ஒன்றியம், கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊர் பெரியவர்களை சந்தித்து பிரச்சாரத்தை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சிவகுரு மள்ளர், மதன், பத்மநாபன், சுந்தர், மகேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் கோவை ராமானுஜர் நகர் அருகில் உள்ள சிலம்பு வணிக வளாகத்தில், இன்று நடைபெற்றது. பேரவைத் தலைவர், மனுநீதிச்சோழன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில, அமைப்பு செயலாளர் சதீஷ் மள்ளர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கொங்கு வம்ச பட்டக்காரர் வி.யூ. கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
முன்னதாக, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பிக்க வழிவகை செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களாக, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பொது மேடைகளில் பேசி கௌரவித்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், வரும் சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை அறிவிப்பிற்கு அடித்தளம் அமைத்து நிறைவேற்றிய அதிமுக அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள 21 சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மாவட்டம் ஒன்றியம், கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊர் பெரியவர்களை சந்தித்து பிரச்சாரத்தை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சிவகுரு மள்ளர், மதன், பத்மநாபன், சுந்தர், மகேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.