கோவை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை நேற்று அறிவித்த நிலையில், கருணாஸிடம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது.
கோவை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை நேற்று அறிவித்த நிலையில், கருணாஸிடம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், ஆதரவு கடிதத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் கருணாஸ்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், ஆதரவு கடிதத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் கருணாஸ்.