கோவை: கோவையில் காணாமல்போன மாற்றுத்திறனாளி அக்கா மற்றும் தம்பி தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டனர்.
கோவை: கோவையில் காணாமல்போன மாற்றுத்திறனாளி அக்கா மற்றும் தம்பி தண்ணீர் தொட்டியில்பிணமாக மீட்கப்பட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவரது அக்கா ப்ரீத்தா (வயது 30). மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரையும் கடந்த 6-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அலமேலு என்பவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டு வளாகத்தில் உள்ள தரைமட்டத் தொட்டியில் அருண்குமார், பிரீத்தா ஆகியோர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. விசாரணையில் 5 மாதங்களுக்கு முன் தந்தை பரமேஸ்வரன் காலமாகிவிட்ட நிலையில் மனம் வெறுத்துக் காணப்பட்ட அருண்குமார் தனது சகோதரியுடன் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவரது அக்கா ப்ரீத்தா (வயது 30). மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரையும் கடந்த 6-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அலமேலு என்பவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டு வளாகத்தில் உள்ள தரைமட்டத் தொட்டியில் அருண்குமார், பிரீத்தா ஆகியோர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. விசாரணையில் 5 மாதங்களுக்கு முன் தந்தை பரமேஸ்வரன் காலமாகிவிட்ட நிலையில் மனம் வெறுத்துக் காணப்பட்ட அருண்குமார் தனது சகோதரியுடன் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.