பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மிளகாய் வியாபாரி கார்த்திகேயனிடம் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடமிருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேர்வைகாரன்பாளையம் அருகே காரில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 60 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதன்படி ஒரே நாளில் 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது. இந்த தொகை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பணம் கொண்டு வந்த வியாபாரிகளிடம் அதிகாரிகள்தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மிளகாய் வியாபாரி கார்த்திகேயனிடம் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடமிருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேர்வைகாரன்பாளையம் அருகே காரில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 60 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதன்படி ஒரே நாளில் 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது. இந்த தொகை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பணம் கொண்டு வந்த வியாபாரிகளிடம் அதிகாரிகள்தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.