கோவை: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
கோவை: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி, தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கட்சிகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் நடைமுறைப்படுத்தவிருக்கும் வாக்குறுதிகள் என்னென்ன என்று நேற்று வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் ஆண்டுதோறும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலையின்மை பிரச்சினையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்த்தி தரப்படும், கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து தரப்படும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவுநிலை அகற்றப்படும், 35 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவகையில் தமிழகத்தில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், எந்த வானிலைக்கும் அசைந்துகொடுக்காத அளவுக்கு நவீன தரமான சாலைகளை அமைக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
`தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்னும் தலைப்பில் திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்புகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.