பொள்ளாச்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளைக்கும்பல் தலைவன் கைது: ரூ. 4 லட்சம் தங்க, வைர நகைகள் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளைக்கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ரூ. 4 லட்சம் தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளைக்கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ரூ. 4 லட்சம் தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளாவைச் சேர்ந்த பிரபல கொள்ளைக் கும்பல் தலைவன் சஜாத் (வயது 61). இவர் நூதனமான முறையில் கொள்ளையடித்து வந்துள்ளார். இதையடுத்து போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் வழிப்பறி கொள்ளை மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் மற்றும் சரக துணை தலைவர் நரேந்திர நாயர், உத்தரவின்பேரில் மாவட்ட எஸ்.பி. அருளரசு மேற்பார்வையில் நெகமம் துணை ஆணையர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

நேற்று குற்றவாளி சுஜாத்தை திருச்சி துவாக்குடி டோல்கேட் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 



அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி அவரிடமிருந்து 17 அரை பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், 2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் உள்பட 4 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்மீது கேரள மாநிலத்திலும் பல்வேறு கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...