கோவை: பொது இடக்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: பொது இடக்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் அக்கறை காட்டி வருகிறது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார், துணை ராணுவ வீரர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டமாக சென்று வாக்கு சேகரிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நேரத்தில்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் போது 5 பேர் மட்டும் தான் செல்ல வேண்டும். பொது இடங்களில் பிரச்சாரம் செய்யும்போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இதை அனைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.