கோவை, திருப்பூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ பணப்பட்டுவாடா கண்காணிக்க பறக்கும்‌ படை!

கோவை: கோவை, திருப்பூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பறக்கும்‌ படை அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, திருப்பூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பறக்கும்‌ படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல்‌ செலவுகளைக்‌ கண்காணிப்பது குறித்து மத்திய மறைமுக வரிகள்‌ வாரியம்‌ மற்றும்‌ கோவை தலைமை ஆணையரின்‌ அறிவுறுத்தலின்படி தேர்தல்‌ நடத்தை விதிகளுக்குப் புறம்பாக வாக்காளர்களைக் கவர கொண்டு செல்லப்படும்‌ கடத்தல்‌, தடை செய்யப்பட மற்றும்‌ சட்ட விரோத பொருட்களின்‌ நடமாட்டத்தைக் கண்காணிக்க கோவை தலைமை ஆணையரின்‌ கண்காணிப்பில்‌ ஐந்து பறக்கும்‌ படைக்‌ குழுக்களும்‌ ஒரு நிலையான கண்காணிப்புக் குழுவும்‌ அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏதேனும்‌ தகவல்‌ தெரிவிக்க விரும்புவோர்‌ உதவி ஆணையர்‌ சந்தோஷ்‌குமாரை 9447603774 என்ற எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌. தகவல்‌ கொடுத்தவர்களின்‌ அடையாளம்‌ பாதுகாக்கப்படும்‌. இதனை பொதுமக்கள்‌ பயன்படுத்தி சுதந்திரமான மற்றும்‌ நியாயமான தேர்தல்‌ நடைபெறுவதற்கு உதவ வேண்டும்‌.

இந்த பறக்கும்‌ படைகள்‌ கோவை தலைமை ஆணையரின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள கோவை, திருப்பூர்‌, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ கண்காணிப்பு பணியில்‌ ஈடுபடும்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...