பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. தங்க மோதிரம் வழங்கியதாக வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால் பறக்கும் படையினரும், பொதுமக்களும் பரபரப்புக்குள்ளாகினர்.
பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. தங்க மோதிரம் வழங்கியதாக வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால் பறக்கும் படையினரும், பொதுமக்களும் பரபரப்புக்குள்ளாகினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தி.மு.க. நெசவாளர் அணி சார்பில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மார்ச் 1-ந்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து 'அலர்ட்' ஆன பறக்கும் படை குழு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தது. ஆனால் அங்கு சென்று பார்த்தபோது தி.மு.க.வினர் மருத்துவமனை வரவில்லை. அப்படியொரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் தி.மு.க.வினர் மோதிரம் வழங்கியது போன்ற போட்டோவும் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு, 'வாட்ஸ்ஆப்'பில் வந்தது. இதனால் பரபரப்படைந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் அந்த போட்டோ குறித்தும், சம்பவம் உண்மையா என்பது குறித்தும் விசாரித்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் கூறுகையில், ''பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கியதுபோன்று, பழைய போட்டோ பகிரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று தேவையில்லாமல் வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தி.மு.க. நெசவாளர் அணி சார்பில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மார்ச் 1-ந்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து 'அலர்ட்' ஆன பறக்கும் படை குழு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தது. ஆனால் அங்கு சென்று பார்த்தபோது தி.மு.க.வினர் மருத்துவமனை வரவில்லை. அப்படியொரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் தி.மு.க.வினர் மோதிரம் வழங்கியது போன்ற போட்டோவும் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு, 'வாட்ஸ்ஆப்'பில் வந்தது. இதனால் பரபரப்படைந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் அந்த போட்டோ குறித்தும், சம்பவம் உண்மையா என்பது குறித்தும் விசாரித்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் கூறுகையில், ''பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கியதுபோன்று, பழைய போட்டோ பகிரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று தேவையில்லாமல் வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.