கோவை: மீனாட்சிபுரம் அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றதாக அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: மீனாட்சிபுரம் அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றதாக அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகளைக் கண்டறிய பறக்கும்படையினர் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாக செல்லும் முக்கிய ரோடுகளில் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தேர்தல் பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர், போலீசார் மற்றும் வீடியோ கேமராமேன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில்ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆனைமலை போலீஸ் எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் ரயில்கேட் பகுதியில், வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரிவு பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த, பெரியபோதுவைச் சேர்ந்த ராமு என்பவரது பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அதில், உரிய ஆவணமில்லாமல் ரூ. 2 லட்சம் இருந்துள்ளது. அவரிடம் விசாரிக்கும்போது, தேங்காய் வியாபாரம் செய்துவிட்டு கொண்டுசெல்வதாக தெரிவித்தார்.

இருப்பினும், அவர் வைத்திருந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை என்பதால், தேர்தல் பிரிவு கண்காணிப்புக் குழுவினர் அதனை பறிமுதல் செய்து, ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகளைக் கண்டறிய பறக்கும்படையினர் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாக செல்லும் முக்கிய ரோடுகளில் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தேர்தல் பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர், போலீசார் மற்றும் வீடியோ கேமராமேன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில்ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆனைமலை போலீஸ் எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் ரயில்கேட் பகுதியில், வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரிவு பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த, பெரியபோதுவைச் சேர்ந்த ராமு என்பவரது பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அதில், உரிய ஆவணமில்லாமல் ரூ. 2 லட்சம் இருந்துள்ளது. அவரிடம் விசாரிக்கும்போது, தேங்காய் வியாபாரம் செய்துவிட்டு கொண்டுசெல்வதாக தெரிவித்தார்.
இருப்பினும், அவர் வைத்திருந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை என்பதால், தேர்தல் பிரிவு கண்காணிப்புக் குழுவினர் அதனை பறிமுதல் செய்து, ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.